எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மக்களை ஏமாற்றி, ராமர் பெயரில் அரசியல் செய்தது பாஜக! -பைசாபாத் எம்.பி.

பாஜகவினர் மக்களை ஏமாற்றி, ராமரின் பெயரில் அரசியல் செய்ததாக பைசாபாத் எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.

News image

அகிலேஷ் யாதவுடன் அவதேஷ் பிரசாத் - படம்| எக்ஸ் தளப் பதிவு

Updated On :6 ஜூன் 2024, 4:16 pm IST

பைசாபாத்தில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சமாஜ்வாதி கட்சி எம்.பி அவதேஷ் பிரசாத், பாஜக ராமரின் உண்மையான சீடர் அல்ல என்றும், அவரது பெயரில் அரசியல் செய்து மக்களை ஏமாற்றுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளர்.

உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு, ஜனவரி 22-ல் அதன் கும்பாபிஷேக விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கிய உத்தரப் பிரதேசத்தின் பைசாபாத் மக்களவைத் தொகுதியில் அவதேஷ் பிரசாத் 54,567 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவைச் சேர்ந்த லல்லு சிங்கை தோற்கடித்தார்.

இதுகுறித்து அவதேஷ் பிரசாத் கூறுகையில்,“அயோத்தியின் பெயரில் பாஜக அரசியல் செய்தது. அவர்கள் ராமரின் கண்ணியத்திற்கு எதிராக செயல்பட்டனர்.

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போதும்கூட, ​​பாஜக தலைவர்கள் ராமர் கோயில் கட்டிய பெருமையை மோடிக்கு வழங்கினார்கள். இந்த விவகாரமும் கட்சியின் முக்கிய தேர்தல் திட்டங்களில் ஒன்றாக இருந்தது.

ராமரைக் கொண்டு வந்தவர்களை நாங்கள் கொண்டு வருவோம் என்ற பாஜகவினர் கூறினார்கள். ஆனால், அவர்கள் (பாஜக) ராமரைக் கொண்டு வரவில்லை. இது அவர்களின் தவறான முழக்கம். இதனை பொதுமக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். ராமரை யாரும் அழைத்து வரவில்லை. ராமர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்தவர். அனைவரின் இதயத்திலும் ராமர் இருக்கிறார். அவர் அனைவரின் நம்பிக்கையின் மையமாக இருக்கிறார். அவர்கள் (பாஜக) ராமர் பெயரில் அரசியல் செய்து நாட்டை ஏமாற்றிவிட்டனர். நாட்டை சீரழித்துவிட்டார்கள்.

நாட்டில் ராமராஜ்ஜியம் கொண்டு வரப்படும் என்று பாஜகவினர் வாக்குறுதி கொடுத்தனர். ஆனால், பாஜக ஆட்சிக் காலத்தில் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் என அனைத்து வகையான பிரச்னைகளையும் மக்கள் எதிர்கொண்டனர்.

நான்கு ஆண்டு கால ராணுவ ஆள்சேர்ப்பு திட்டமான அக்னிபத் திட்டத்தின் மூலம் நமது நாட்டின் ராணுவம் அவமதிக்கப்பட்டுள்ளது. மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி அமைக்கப்பட்டால், அக்னிவீர் யோஜனா ஒழிக்கப்படும்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.