ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

'நான் பாதுகாப்பாக இருக்கிறேன்' - விடியோ வெளியிட்ட கங்கனா ரணாவத்!

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த எம்பி கங்கனா ரணாவத்தை, சிஐஎஸ்எஃப் அதிகாரி கன்னத்தில் அறைந்தார்.

News image
Updated On :6 ஜூன் 2024, 1:27 pm

DIN

பாலிவுட் நடிகையும், ஹிமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியின் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத், தில்லி செல்வதற்காக சண்டீகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைக்கு பிறகு, வந்தபோது விமானத்தில் ஏறுமிடத்தில் சிஐஎஸ்எஃப் அதிகாரி குல்விந்தர் கௌர் அவரை கன்னத்தில் அறைந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதுகுறித்து பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட விடியோ பதிவில்,” ஊடகங்கள் வாயிலாகவும், தொலைபேசியிலும் எனது நலம் விரும்பிகளிடமிருந்து எனக்கு நிறைய அழைப்புகள் வருகின்றன. நான் பாதுகாப்பாக இருக்கிறேன்,எனக்கு ஒன்றும் ஆகவில்லை, நன்றாக இருக்கிறேன். சண்டீகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை முடிந்து நான் வெளியே வந்தவுடன், இரண்டாவது கேபினில் இருந்த சிஐஎஸ்எஃப் பெண் செக்யூரிட்டி ஒருவர் என் முகத்தில் அறந்தார். விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறேன். ஆனால், பஞ்சாபில் அதிகரித்து வரும் தீவிரவாதம் குறித்து கவலை கொள்கிறேன்” என்றார்.

முன்னதாக, விவசாயிகளின் போராட்டம் குறித்து கங்கனா ரணாவத் கூறிய கருத்துக்களால் குல்விந்தர் கௌர் அதிருப்தி அடைந்திருந்ததால், அவர் கங்கனா ரணாவத்தை அறைந்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.