

கேரளத்தை சேர்ந்த பாஜக எம்.பி. ஒருவர் முதன்முதலாக மத்திய அமைச்சராகியுள்ளார்.
மத்தியில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் யார், யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்று(ஜூன் 9) குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். மாலை 7.15 மணியளவில் தொடங்கிய பதவியேற்பு விழாவில், தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கேரளத்தின் திருச்சூர் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற மலையாள நடிகர் சுரேஷ் கோபிக்கு மத்திய அமைச்சரவையில் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் மத்திய இணையமைச்சராக இன்று(ஜூன் 9) பதவியேற்றுக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.