5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

ஜார்க்கண்ட்: என்கவுன்ட்டரில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ஜார்க்கண்ட்டில் என்கவுன்ட்டரில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

News image

(கோப்பு படம்)

Updated On :17 ஜூன் 2024, 11:03 am IST

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் பகுதியில் காவல்துறையினருடன் நடந்த என்கவுன்ட்டரில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து ஜார்க்கண்ட் காவல்துறை செய்தித் தொடர்பாளரும், காவல் துறைத் தலைவருமான அமோல் வி.ஹோம்கர் கூறுகையில், “டோண்டோ மற்றும் கோயில்கேரா பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நான்கு மாவோயிஸ்டுகளில், மண்டல தளபதி, துணை மண்டல தளபதி, பகுதி கமாண்டர் மற்றும் அமைப்பைச் சேர்ந்தவர் ஒருவர் கொல்லப்பட்டனர். ஒரு பெண் உள்பட இரண்டு மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

மேலும், தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.