வட இந்தியாவில் வெப்பத் தாக்குதலுக்கு 110 பேர் பலி, 40 ஆயிரம் பேர் பாதிப்பு!

வட மாநிலங்களில் வாட்டி எடுக்கும் வெயிலுக்கு நாளுக்குநாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..
வெப்பத்தில் தற்காத்துக்கொள்ளும் பெண்கள்
வெப்பத்தில் தற்காத்துக்கொள்ளும் பெண்கள்
Published on
Updated on
1 min read

வட இந்தியாவில் வாட்டி வதைக்கும் கடுமையான வெப்பத் தாக்குதலுக்கு இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்தாண்டு நாட்டின் பெரும்பாலான பகுதியில் வெப்ப அலை வீசி வருகின்றது. வெப்ப தாக்குதலைத் தாங்க முடியாமல் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக பஞ்சாப், ஹரியாணா, தில்லி, உத்தரப் பிரதேசம், ஹிமாச்சல், உத்தரகண்ட், பிகார், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும், வடகிழக்கு மத்திய பிரதேசம், வடமேற்கு ராஜஸ்தான், ஜம்மு உள்ளிட்ட இடங்களிலும் வெப்ப அலையின் தாக்கம் மிகத் தீவிரத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்பத்தில் தற்காத்துக்கொள்ளும் பெண்கள்
பேருந்து நிலையத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்!

இந்த நிலையில் கடந்த மார்ச் 1 முதல் ஜூன் 18 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கத்துக்கு 110 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக உத்தரப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூன் 18ல் மட்டும் வெப்பத் தாக்குதலுக்கு 6 பேர் இறந்துள்ளனர்.

மேலும், வெப்ப தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com