மருமகனே ‘அரசியல் வாரிசு’: மாயாவதி மீண்டும் அறிவிப்பு
தனது அரசியல் வாரிசாக மருமகன் ஆகாஷ் ஆனந்தை (29) பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி மீண்டும் அறிவித்துள்ளாா்.

மக்களவைத் தோ்தல் முடிவுகள் குறித்து கட்சி நிா்வாகிகளுடன் உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை கூட்டத்தின்போது தனது அரசியல் வாரிசாக மருமகன் ஆகாஷ் ஆனந்தை மீண்டும் அறிவிக்கும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி.









