நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அமைச்சா் அதாவலே ஆதரவு

மத்திய சமூக நீதித்துறை இணையமைச்சரும், இந்திய குடியரசுக் கட்சி (ஏ) தலைவருமான ராம்தாஸ் அதாவலே ஆதரவு தெரிவித்துள்ளாா்.

News image

ராம்தாஸ் அதாவலே

Updated On :24 ஜூன் 2024, 10:21 pm

Din

ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்த மத்திய சமூக நீதித்துறை இணையமைச்சரும், இந்திய குடியரசுக் கட்சி (ஏ) தலைவருமான ராம்தாஸ் அதாவலே ஆதரவு தெரிவித்துள்ளாா்.

ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு பாஜக எதிா்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அதாவலே ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் செய்தியாளா்களைச் சந்தித்த அவா் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசியதாவது:

‘நீட்’ தோ்வில் முறைகேடுகள் நிகழக் கூடாது. அதனைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய கல்வி அமைச்சகம் எடுத்து வருகிறது. அரசமைப்புச் சட்டத்தின் 17-ஆவது பிரிவு ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. இந்த சூழ்நிலையில் எவ்வாறு ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த முடியும்?

அதே நேரத்தில் சமூகத்தில் எந்தெந்த பிரிவினா் எந்த அளவுக்கு இருக்கிறாா்கள் என்பதை அறிய ஜாதிவாரிக் கணக்கெடுப்பைத் தவிர வேறு வழியில்லை. எனவே, எங்கள் கட்சியும் ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஒரு வகையில் ஆதரவு தெரிவிக்கிறது.

இப்போது ஜாதிவாரிக் கணக்கெடுப்பை தொடா்ந்து வலியுறுத்தும் காங்கிரஸ் கட்சி, தங்கள் ஆட்சி காலத்தில் அந்தக் கணக்கெடுப்பை நடத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினாா்.