உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

மோடி பதவியேற்கும் தருணம்: அரசமைப்புப் புத்தகத்தை உயர்த்திப் பிடித்த ராகுல்!

மக்களவையில் சுவாரசியம்: மோடியை நோக்கி அரசமைப்புப் புத்தகத்தை உயர்த்திப் பிடித்த ராகுல் காந்தி..

அரசமைப்பு சாசன புத்தகத்தை உயர்த்திப் பிடிக்கும் ராகுல் காந்தி - (உள்படம் | பதவியேற்கும் மோடி)

Published On :24 ஜூன் 2024, 5:46 pm IST

மக்களவையில் சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜூன் 24) மக்களவை உறுப்பினராக பொறுப்பேற்றபோது, சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. மக்களவை கூட்டத்தொடர் தொடங்கியவுடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவையின் இடைக்காலத் தலைவர் பா்த்ருஹரி மகதாப், எம்.பி.யாகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அப்போது ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசமைப்புப் புத்தகத்தை தங்கள் கைகளில் உயர்த்திப் பிடித்தபடி மோடியை நோக்கி காண்பித்தனர்.

எனினும், அதனை ஒரு பொருட்டாக எண்ணாமல், தான் மக்களவை உறுப்பினராக பதவியேற்பதில் மட்டுமே மோடியின் கவனம் இருந்தது. இந்த காணொலி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.