எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மக்களவைத் தலைவர்: கூட்டணிக் கட்சிகளுடன் ராஜ்நாத் சிங் பேச்சு!

இந்தியா கூட்டணி வேட்பாளர் நிறுத்தினால், முதல்முறையாக மக்களவைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறும்.

News image

ராஜ்நாத் சிங்

Updated On :25 ஜூன் 2024, 10:46 am IST

மக்களவைத் தலைவர் நாளை தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். இந்தியா கூட்டணி தரப்பில் மக்களவைத் தலைவர் பதவிக்கு விண்ணப்பித்தால் நாளை காலை மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெறும்.

அவ்வாறு நடைபெற்றால், நாட்டில் முதல்முறையாக மக்களவைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறும். இதுவரை அப்பதவிக்கு தேர்தல் நடந்ததில்லை.

18-ஆவது மக்களவைத் தோ்தலில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றது.

பாஜகவுக்கு (240) தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காத நிலையில், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் அக்கட்சி ஆட்சியமைத்தது.

இந்த நிலையில், மக்களவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை தேர்ந்தெடுக்க கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு பாஜகவுக்கு கட்டாயமாகியுள்ளது.

17-வது மக்களவையின் தலைவராக இருந்த ஓம் பிர்லா மீண்டும் தலைவர் பதவிக்கு விண்ணிப்பிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மக்களவை இடைக்காலத் தலைவராகவுள்ள பா்த்ருஹரி மகதாப்பும் விண்ணிப்பிக்க வாய்ப்புள்ளது.

மேலும், கூட்டணிக் கட்சிகளுடனான ஆலோசனைக்கு பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணித் தரப்பில் மக்களவைத் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க போகும் நபரின் பெயர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், மக்களவைத் துணைத் தலைவர் பதவி பாஜகவுக்கா அல்லது கூட்டணிக் கட்சிக்கா என்பதும் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.