மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

டோமினோஸ் உரிமத்தை பெற முயன்று ரூ. 20 லட்சத்தை இழந்த நபர்!

போலி வலைதளத்தில் விண்ணப்பித்து பணத்தை இழந்த லூதியானா நபர்.

News image
Updated On :26 ஜூன் 2024, 3:36 pm IST

டோமினோஸ் பீட்சா கிளையை தொடங்குவதற்கு உரிமம் பெற இணையத்தில் முயற்சித்த நபரிடம் இருந்து ரூ. 20.77 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த தார்செம் சிங் கோகோனி(வயது 48) டோமினோஸ் பீட்சா கிளைக்கான உரிமத்தை பெறுவதற்காக இணையதளத்தில் ஆராய்ந்து வந்துள்ளார்.

அப்போது, டோமினோஸ் கிளை உரிமையாளர்களுக்கான அதிகாரப்பூர்வ வலைதளம் போன்ற ஒன்றை கண்டுள்ளார். அதன் தோற்றத்தை கண்டு அதிகாரப்பூர்வ வலைதளமென கருதி தொடர்ந்து கிளை பெறுவதற்கான விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளார்.

சிறிது நேரத்தில் கோகோனியை தொடர்பு கொண்ட ஒருவர், டோமினோஸ் பீட்சா நிறுவனத்தின் ஊழியரை போன்று அவரிடம் பேசியுள்ளார். மேலும், கிளை தொடங்குவதற்கான முறைகள், விதிமுறைகள் உள்ளிட்டவற்றை தத்துரூபமாக பேசியதுடன், உரிமத்தை தக்க வைத்துக் கொள்ள ரூ.20.77 லட்சம் முன்பணமாக கேட்டுள்ளார்.

கோகோனியும் அவரின் பேச்சை நம்பி ரூ.20.77 லட்சம் பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். ஆனால், பணம் செலுத்திய பிறகு கோகோனியின் அழைப்பை அந்த நபர் எடுக்காத நிலையில், ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்து காவல் நிலைய சைபர் பிரிவில் புகார் அளித்துள்ளார்.

இதேபோன்று சிறிது நாள்களுக்கு முன்னதாக, லூதியானா பகுதியை சேர்ந்த ஹிதேஷ் குப்தா என்பவர், கார் ஷோரூப் உரிமத்தை பெறுவதற்காக தவறான வலைதளத்தில் தேடி ரூ. 65 லட்சத்தை பறிகொடுத்தார்.

காவல்துறையின் தீவிர விசாரணைக்கு பிறகு ஹிதேஷ் குமார் பறிகொடுத்ததில், ரூ. 23 லட்சம் வரை மீட்டுக் கொடுத்திருந்தனர்.

இதுபோன்ற மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, நீங்கள் தேடுதலில் ஈடுபடும் வலைதளம் அதிகாரப்பூர்வமானதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பணம் செலுத்துவதற்கு முன்பு அதிகாரப்பூர்வ எண்களை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.