பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மக்களின் குரலாக எதிர்க்கட்சிகள்: ராகுல் காந்தியின் முதல் உரை!

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியின் முதல் உரை.

News image

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி - -

Updated On :26 ஜூன் 2024, 12:45 pm IST

மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி அவையில் முதல்முறையாக இன்று பேசியுள்ளார்.

18-வது மக்களவைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்பி ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்து ராகுல் காந்தி மக்களவையில் உரையாற்றினார்.

அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

”தேர்தலில் வெற்றி பெற்று மக்களவைத் தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களுக்கு அனைத்து எதிர்க்கட்சிகள் மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.

இந்த அவை நாட்டு மக்களின் குரலாக ஒலிக்கிறது. நீங்கள்தான் அந்த குரல்களின் இறுதி நடுவர். அரசுக்கு அரசியல் அதிகாரம் உண்டு. ஆனால், எதிர்க்கட்சிகள் மக்களின் குரலாக ஒலிக்கும். கடந்த முறையைவிட தற்போது கூடுதல் பலத்துடன் ஒலிக்கும்.

உங்களின் கடமைகளை நீங்கள் செய்ய எதிர்க்கட்சிகள் உங்களுக்கு உதவ விரும்புகின்றன. இந்த அவை சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நம்பிக்கையின் அடிப்படையில் ஒத்துழைப்பது மிகவும் முக்கியம். இந்த அவையில் எதிர்க்கட்சிகளின் குரல்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது மிகவும் முக்கியம்.

இந்திய மக்களின் குரலான எங்களின் குரலுக்கு வாய்ப்பளிப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த அவை எவ்வளவு திறமையாக நடத்தப்படுகிறது என்பது கேள்வி அல்ல, மக்களுக்காக எந்தளவு ஒலிக்க அனுமதிக்கப்படுகிறது என்பதே கேள்வி.

எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கி அவையை திறமையாக நடத்தலாம் என்று எண்ணுவது ஜனநாயகத்துக்கு புறம்பானது. நாட்டின் அரசியல் சாசன சட்டத்தை காக்க எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கின்றன. இந்திய மக்களும் எதிர்பார்க்கிறார்கள் என்பதை தேர்தல் காட்டியுள்ளது.” எனத் தெரிவித்தார்.

நாட்டில் முதல்முறையாக நடைபெற்ற மக்களவைத் தலைவருக்கான தேர்தலில் பாஜக எம்பி ஓம் பிர்லா வெற்றி பெற்றார். இதுநாள் வரை ஒருமனதாகவே மக்களவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்.

இந்த நிலையில், மக்களவைத் துணைத் தலைவர் பதவியை எதிர்க்கட்சிகள் கேட்ட நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தர மறுக்க, மக்களவைத் தலைவர் பதவிக்கு இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸின் கொடிக்குன்னில் சுரேஷ் நிறுத்தப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற மக்களவைத் தலைவர் பதவிக்கான குரல் வாக்கெடுப்பில் ஓம் பிர்லா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஓம் பிர்லாவை மோடியும், ராகுல் காந்தியும் ஒன்றுசேர அழைத்துச் சென்று மக்களவைத் தலைவருக்கான இருக்கையில் அமர வைத்தனர்.

தொடர்ந்து, ஓம் பிர்லாவை வாழ்த்தி மோடியும், ராகுல் காந்தியும் அவையில் உரையாற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.