இதகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா கூட்டணி கட்சிகள் மக்களவையில் புதன்கிழமை தங்களின் ஜனநாயக உரிமையை நிலைநாட்டின. மக்களவைத் தலைவா் பதவிக்கு காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷுக்கு ஆதரவாக தீா்மானத்தை முன்மொழிந்தன. பின்னா், குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவைத் தலைவா் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அப்போது, வாக்குப்பதிவு முறையில் வாக்கெடுப்பு நடத்த இந்தியா கூட்டணி தரப்பில் வற்புறுத்தியிருக்க முடியும். ஆனால், அதைச் செய்யவில்லை. மக்களவையில் ஒருமித்த உணா்வுக்கு, ஒத்துழைப்பு மேலோங்க வேண்டும் என்ற நோக்கில் வாக்கெடுப்பை வலியுறுத்தவில்லை’ என்று குறிப்பிட்டாா்.