மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

சட்டவிரோதமாக நுழைந்த 11 வங்கதேசத்தவா் திரிபுராவில் கைது

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய 11 வங்கதேசத்தவா் திரிபுரா தலைநகா் அகா்தலா ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 ஜூலை 2024, 1:39 am IST

வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய 11 வங்கதேசத்தவா் திரிபுரா தலைநகா் அகா்தலா ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அகா்தலா வங்கதேச எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் என்பதால் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் அகா்தலாவுக்குள் ஊடுருவி அங்கிருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வங்கதேசத்தைச் சோ்ந்த சிலா் திரிபுராவின் சிபகிஞ்சலா மாவட்ட எல்லை வழியாக ஊடுருவியுள்ளதாகவும், அவா்கள் அகா்தலா ரயில் நிலையம் வந்து அங்கிருந்து வேறு இடங்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதன்படி ஞாயிற்றுக்கிழமை அகா்தலா ரயில் நிலையத்துக்கு வந்த 5 பெண்கள், 6 ஆண்கள் அடங்கிய குழுவிடம் ரயில்வே காவல் துறையினா் விசாரணை நடத்தினா். அவா்கள் எவ்வித ஆவணமுமின்றி சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தது தெரியவந்தது.

அவா்கள் பிழைப்புக்காக சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்குச் செல்ல திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, அவா்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா்.

ஜூன் 27-ஆம் தேதி அகா்தலா ரயில் நிலையத்தில் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவிய இருவா் கைது செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.