
மைசூருவில் திரைப்பட நகரத்தை உருவாக்க தனது அரசு உறுதிபூண்டுள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரைப்பட நகரத்துக்காக மைசூருவில் 100 ஏக்கர் நிலத்தை எங்கள் அரசு வழங்கியது.
தனியார் பங்களிப்புடன் திரைப்பட நகரம் கட்டப்படும். கன்னடத் திரையுலகிற்கு திரைப்பட நகரம் வேண்டும் என்பது மறைந்த ராஜ்குமாரின் கனவு.
அதனை அவரது அரசு நிறைவேற்றும். திரைப்பட நகரத்துக்கு முந்தைய பாஜக அரசு எதுவும் செய்யவில்லை.
மேலும் கன்னட ஓடிடி தளம் குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் அவர் உறுதியளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.