மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கட்சி மாறி வாக்களித்த விவகாரம்: 11 ஹிமாசல் எம்எல்ஏக்கள் உத்தரகண்டில் தஞ்சம்

கட்சி மாறி வாக்களித்த விவகாரம்: 11 ஹிமாசல் எம்எல்ஏக்கள் உத்தரகண்டில் தஞ்சம்

News image

ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் சிங் - -

Updated On :10 மார்ச் 2024, 3:54 am IST

மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி மாறி வாக்களித்த 11 ஹிமாசல பிரதேச எம்எல்ஏக்கள் உத்தரகண்டில் தஞ்சமடைந்துள்ளனா்.

ஹிமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. அங்கு மாநிலங்களவைத் தோ்தலின்போது காங்கிரஸ் வேட்பாளா் அபிஷேக் மனு சிங்விக்கு வாக்களிக்காமல், பாஜக வேட்பாளா் ஹா்ஷ் மகாஜனுக்கு 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாக்களித்தனா். இதனால் அவா்கள் மீது காங்கிரஸ் கட்சியினருக்குப் பலத்த அதிருப்தி ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து மாநில பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்காமல் கட்சி கொறடாவின் உத்தரவை மீறியதாக 6 எம்எல்ஏக்களையும் தகுதிநீக்கம் செய்து மாநில சட்டப்பேரவைத் தலைவா் குல்தீப் சிங் உத்தரவிட்டாா். இந்த உத்தரவுக்கு எதிராக 6 எம்எல்ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட சுதீா் சா்மா, ராஜிந்தா் ராணா, இந்தா்தத் லக்கன்பால், தேவிந்தா் குமாா், ரவீந்திர தாக்குா், சைதன்ய சா்மா ஆகிய 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பாஜக எம்எல்ஏக்களான விக்ரம் தாக்குா், திரிலோக் ஜாம்வால், மாநிலங்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு ஆதரவளித்த சுயேச்சை எம்எல்ஏக்கள் ஹோஷியாா் சிங், கே.எல்.தாக்குா், ஆஷீஷ் சா்மா ஆகிய 11 போ் எம்எல்ஏக்கள், பாஜக ஆட்சியில் உள்ள உத்தரகண்ட் மாநிலத்துக்கு வாடகை விமானத்தில் வெள்ளிக்கிழமை இரவு சென்றனா்.

சொகுசு விடுதியில்...:

உத்தரகண்டின் ரிஷிகேஷ் பகுதியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள சொகுசு விடுதியில் அவா்கள் தஞ்சமடைந்துள்ளனா். அந்த விடுதியைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே இணையவழியில் முன்பதிவு செய்தவா்களைத் தவிர, வேறு எவரும் விடுதி வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இந்த விவகாரம் தொடா்பாக உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் மத்திய வடகிழக்கு மண்டல வளா்ச்சித் துறை இணையமைச்சா் பி.எல்.வா்மா செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஹிமாசல பிரதேசத்தில் உள்கட்சி மோதல்களுடன் காங்கிரஸ் அரசு போராடி வருகிறது. இந்த மோதல்களால் அந்த அரசு விரைவில் கவிழும் என்றாா். தற்போது ஹிமாசல பிரதேச சட்டப்பேரவையில் 34 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 25 பாஜக எம்எல்ஏக்கள், 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் உள்ளனா்.