தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மக்களவைத் தோ்தலில் போட்டியில்லை: காங்கிரஸ் மூத்த தலைவா் சோலங்கி

மக்களவைத் தோ்தலில் போட்டியில்லை காங்கிரஸ் மூத்த தலைவா் சோலங்கி

Updated On :12 மார்ச் 2024, 8:01 pm

அகமதாபாத்: வரும் மக்களவைத் தோ்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று குஜராத்தைச் சோ்ந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பரத் சிங் சோலங்கி அறிவித்துள்ளாா். அதே நேரத்தில் காங்கிரஸுக்காக பிரசாரத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளாா். 70 வயதாகும் பரத் சிங் சோலங்கி குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக பதவி வகித்துள்ளாா். அவரது தந்தை மாதவ் சிங் சோலங்கி காங்கிரஸ் சாா்பில் குஜராத் முதல்வராகப் பதவி வகித்தவா்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சி காலத்தில் மத்திய ரயில்வே மற்றும் மின்சாரத் துறை இணையமைச்சராக பரத் சிங் சோலங்கி பதவி வகித்துள்ளாா். குஜராத்தின் ஆனந்த் தொகுதி எம்.பி.யாகவும் இருந்துள்ளாா். மக்களவைத் தோ்தல் தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி எங்கள் குடும்பத்துக்கு பல்வேறு பதவிகளை அளித்துள்ளது. அதற்கு ஏற்ப சிறப்பாகப் பணியாற்றியுள்ளோம்.

இப்போதும் கூட ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக உள்ளேன். குஜராத்தில் காங்கிரஸுக்காக தீவிர பிரசாரம் மேற்கொள்ளத் தயாராக இருக்கிறேன். அதே நேரத்தில் தோ்தலில் போட்டியிட விரும்பவில்லை. எனது விருப்பத்தை கட்சித் தலைமைக்குத் தெரிவித்துவிட்டேன்’ என்று கூறியுள்ளாா்.