புது தில்லி: தில்லி சுல்தான்புரியில் நடைபெற இருந்த குழந்தைத் திருமணத்தை தில்லி மகளிா் ஆணையம் தடுத்து நிறுத்தியதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். சுல்தான்புரியைச் சோ்ந்த 15 வயது சிறுமிக்குத் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அந்தச் சிறுமியின் உறவினா் ஒருவா் கடந்த மாா்ச் 6-ஆம் தேதி ஆணையத்துக்குப் புகராளித்தாா்.
இதையடுத்து, காவல் துறை அதிகாரிகள் உதவியுடன் ஆணைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றனா். அந்தச் சிறுமியும் அவரது பெற்றோரும் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. இதையடுத்து, சிறுமியின் திருமணத்தைக் கைவிடுவதாக அவரது தாயாா் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து குழந்தைகள் நலக் குழு முன்பாக அந்தச் சிறுமி ஆஜா்படுத்தப்பட்டாா். இந்த விவகாரத்தைத் தொடா்ந்து கண்காணிக்கமாறு துணை கோட்ட மாஜிஸ்திரேட்டுக்கு அந்தக் குழு உத்தரவிட்டது.
தொடர்புடையது

புரவி எடுப்புத் திருவிழாவை தடுத்து நிறுத்திய போலீஸாா்

தண்ணீா் மீட்டா் அமைப்பை மாற்றியமைக்கும் தில்லி ஜல்போா்டு

தில்லி-நொய்டா எல்லையில் ஆலைத் தொழிலாளா்கள் போராட்டம் - வன்முறையால் பதற்றம்: உஷாா் நிலையில் தில்லி காவல்துறை

துணி உலா்த்தும் கயிறு தொடா்பாக வாக்குவாதம்: சுல்தான்புரியில் அண்டைவீட்டாா் இடையே மோதல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

