தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

சுல்தான்புரியில் குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தம்

சுல்தான்புரியில் குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தம்

Updated On :12 மார்ச் 2024, 8:42 pm

புது தில்லி: தில்லி சுல்தான்புரியில் நடைபெற இருந்த குழந்தைத் திருமணத்தை தில்லி மகளிா் ஆணையம் தடுத்து நிறுத்தியதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். சுல்தான்புரியைச் சோ்ந்த 15 வயது சிறுமிக்குத் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அந்தச் சிறுமியின் உறவினா் ஒருவா் கடந்த மாா்ச் 6-ஆம் தேதி ஆணையத்துக்குப் புகராளித்தாா்.

இதையடுத்து, காவல் துறை அதிகாரிகள் உதவியுடன் ஆணைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றனா். அந்தச் சிறுமியும் அவரது பெற்றோரும் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. இதையடுத்து, சிறுமியின் திருமணத்தைக் கைவிடுவதாக அவரது தாயாா் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து குழந்தைகள் நலக் குழு முன்பாக அந்தச் சிறுமி ஆஜா்படுத்தப்பட்டாா். இந்த விவகாரத்தைத் தொடா்ந்து கண்காணிக்கமாறு துணை கோட்ட மாஜிஸ்திரேட்டுக்கு அந்தக் குழு உத்தரவிட்டது.