ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

தேனுக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை டன் ஒன்றுக்கு 2,000 அமெரிக்க டாலராக நிர்ணயம்!

இயற்கை தேனின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை ரூ.2,000 டாலர் நிர்ணயம்!

News image
Updated On :14 மார்ச் 2024, 10:09 pm IST

புதுதில்லி: இயற்கை தேனுக்கு டிசம்பர் வரை டன் ஒன்றுக்கு 2,000 டாலர் ஏற்றுமதி விலையாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளது.

அதே வேளையில், இந்த குறைந்தபட்ச ஏற்றுமதி விலை மதிப்பை விட குறைவான ஏற்றுமதி அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை தேன் ஏற்றுமதி இலவசம் என்ற நிலையில், குறைந்தபட்ச ஏற்றுமதி விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு 2,000 அமெரிக்க டாலர் என்று டிசம்பர் 31, 2024 வரை அல்லது உத்தரவுகள் வரும் வரை என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் இயற்கை தேன் ஏற்றுமதி 15.321 கோடி டாலராக இருந்தது. இது 2022-23ல் 20.3 கோடி அமெரிக்க டாலராக இருந்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகியவை முக்கிய ஏற்றுமதி நாடுகளாக உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.