வரும் மார்ச் 31 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து பொதுத்துறை வங்கிகளும் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள், அரசுப்பணிகளை கையாளும் வகையில் தங்கள் வங்கிக் கிளைகளை 2023-24 நிதியாண்டின் கடைசி நாளான மார்ச் 31 ஆம் தேதி திறந்து இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை, ஆனால் வருமான வரி தொடர்பான பணிகளை முடிக்க வேண்டும் என்பதால் மார்ச் 31 ஆம் தேதி வங்கிகள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை அடங்கும்.
மேலும், தனியார் வங்கிகளான ஆக்சிஸ் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, டிசிபி வங்கி, பெடரல் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கிஆகிய வங்கிகளும் மார்ச் 31 ஆம் தேதி செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










