அமலாக்கத் துறையின் சம்மனை நிராகரித்தார் மஹுவா மொய்த்ரா!

திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறையின் விசாரணையை நிராகரித்துள்ளார்.
திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா
திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா
Updated on
1 min read

திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறையின் விசாரணையை நிராகரித்துள்ளார்.

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் மீறல் வழக்கில் விசாரிக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா தில்லியில் இன்று ஆஜராகுமாறு அமலாக்கத்துறை நேற்று மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியிருந்தது.

முன்னதாக மார்ச் மற்றும் பிப்ரவரி என இரண்டு முறை அமலாக்கத்துறையின் சம்மனை மஹுவா மொய்த்ரா நிராகரித்தார்.

கிருஷ்ணாநகர் தொகுதியில் மஹுவா மொய்த்ரா பிரசாரம் செய்யப்போவதாகக் கூறியுள்ள நிலையில், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு இன்றும் ஆஜராகாமல் சம்மனை நிராகரித்துள்ளார்.

அதேபோன்று தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி ஆகியோருக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com