புதுதில்லி: பொதுத் துறை மின் நிறுவனமான என்.டி.பி.சி. நிறுவனம், 2023-24ஆம் நிதியாண்டில் 42,200 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்தது.
2023-24ஆம் ஆண்டில், என்டிபிசி நிலக்கரி நிலையங்கள் 77 சதவிகித திறன் பயன்பாட்டைப் பதிவு செய்துள்ளதாக என்டிபிசி தனது அறிக்கையில் சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான என்டிபிசி லிமிடெட், 2023-24ஆம் ஆண்டில் 42,200 கோடி யூனிட்களை உற்பத்தி செய்துள்ள நிலையில், இது 2022-23ஆம் ஆண்டை விட 6 சதவிகித வளர்ச்சியாகும். அதே வேளையில் நிறுவனமானது செப்டம்பர் 01, 2023 அன்று 1,42,800 கோடி யூனிட்களை ஒரே நாளில் உற்பத்தி செய்ததும் குறிப்பிடத்தக்கது.