10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! என்ன சொல்கிறார் ஸ்மிருதி இரானி?

சோனியா காந்தி குடும்பம்

Published On :3 மே 2024, 4:08 pm IST

கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக, அமேதி மக்களவைத் தொகுதியில் காந்தி குடும்பத்தினர் வேட்பாளராக களமிறங்காமல் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கிஷோரி லால் ஷர்மா போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதியில் ராகுல் காந்தி மூன்று முறை வெற்றிபெற்றுள்ளார். ஆனால், கடந்த முறை ஸ்மிருதி இரானி பாஜக வேட்பாளராக போட்டியிட்டு ராகுலை வீழ்த்திய நிலையில், ராகுல் தற்போது ரே பரேலி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஸ்மிருதி இரானி கூறுகையில், அமேதியில் தங்களது தோல்வியை காங்கிரஸ் இப்போதே ஒப்புக்கொண்டுவிட்டது என்கிறார்.

அதாவது, அமேதி தொகுதியில் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் போட்டியிடாமல் தவிர்க்கப்பட்டிருப்பதன் மூலம், தேர்தல் நடக்கும் முன்பே, காங்கிரஸ் கட்சி அதன் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டது என்று ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

கடந்த 1967ஆம் ஆண்டு முதல் அமேதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்துள்ளது, இங்கு ராகுல் மூன்று முறை எம்.பி.யாக இருந்தால், அதற்கு முன்பு சோனியா எம்.பி.யாக இருந்தார். அவ்வளவு ஏன், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் சஞ்சய் காந்தி கூட அமேதி தொகுதி எம்.பி.யாக இருந்தவர்கள்தான்.

இதற்கு முன்பு, காந்தி குடும்பம் இல்லாத தேர்தலை அமேதி கடைசியாக 1998ஆம் ஆண்டுதான் சந்தித்தது. அப்போது ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பர் சதீஷ் ஷர்மா போட்டியிட்டு தோற்றது குறிப்பிடத்தக்கது.

அமேதியில் போட்டியிடும் கே.எல். ஷர்மாவுக்கு வெற்றி வாய்ப்பு?

அமேதி தொகுதியில் ராகுல் போட்டியிடவில்லை என்பது குறித்த அறிவிப்பு வெளியானது முதல், பல்வேறு தரப்பிலும் விமரிசனங்கள் எழுந்துள்ளன. அமேதியிலிருந்து ராகுல் ஓடுவதாக பாஜக தலைவர்கள் விமரிசித்துள்ளனர்.

ஆனால், காங்கிரஸ் தரப்பில் என்ன சொல்லப்படுகிறது என்றால் ராகுல் தோற்று விடுவார் என்ற பயத்திலேயே அமேதியை விட்டு ஓடுவதாகக் கூறுகிறார்கள். ஆனால், இந்த பேச்செல்லாம் வெகு நாள் நீடிக்காது.

ஒருவேளை, அமேதியில் கே.எல். ஷர்மா தோல்வியடைந்தால் அது பெரிய விஷயமல்ல, ஆனால் அதுவே அவர் வெற்றி பெற்றால், அது மிகப்பெரிய விஷயம்தானே? அமேதி தொகுதியை முற்றிலும் அறிந்தவர் கே.எல். ஷர்மா. அவரும் காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் என்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.