கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு
படம் | ஏஎன்ஐ

கா்நாடகத்தில் ஏப். 26, மே 7ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு நடக்கிறது.

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு
ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

கா்நாடகத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக உடுப்பி, ஹாசன், தென்கன்னடம், சித்ரதுா்கா, தும்கூரு, மண்டியா, மைசூரு, சாமராஜ்நகா், ஊரக பெங்களூரு, வடக்கு பெங்களூரு, மத்திய பெங்களூரு, தெற்கு பெங்களூரு, சிக்பளாப்பூா், கோலாா் ஆகிய 14 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப். 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், மே.7-ஆம் தேதி நடக்க இருக்கும் இரண்டாம் கட்ட தோ்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் விறுவிறுப்பான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு
2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

கர்நாடகத்தில் மத்திய, வட மாவட்டங்களை உள்ளடக்கிய மீதமுள்ள 14 மக்களவைத் தொகுதிகளுக்கும், மே.7-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கர்நாடகத்தின் அண்டை மாநிலங்களான மகாராஷ்டிரம், தெலங்கானா மாநில எல்லைகளை ஒட்டிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், கர்நாடகத்தில் இன்று(மே. 5) மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வடைகிறது. இதையடுத்து அரசியல் தலைவர்கள் பலர், கர்நாடகத்தில் இறுதிகட்ட பிரசாரத்தில் இன்று(மே. 5) மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com