கிருஷ்ண பக்திக்கான பன்னாட்டு அமைப்பின் (இஸ்கான்) மேலாண்மை குழு ஆணையர் ஸ்ரீல கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மகாராஜாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த இரங்கல் குறிப்பில், “ஸ்ரீல கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மகாராஜா மதிப்பிற்குரிய ஆன்மிக ஆளுமையாக திகழ்ந்தவர். கடவுள் கிருஷ்ணரின் மீது கொண்ட மாறாத பக்தி மற்றும் இஸ்கான் மூலம் அவர் மேற்கொண்ட ஓய்வறியாத சேவைக்காக உலகளவில் மதிக்கப்பட்டவர். அவரது போதனைகள் பக்தி, இரக்கம் மற்றும் மற்றவர்களுக்கு உதவுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. இஸ்கானின் சமூக சேவையை குறிப்பாக கல்வி, சுகாதாரம் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு உதவுதல் ஆகிய துறைகளில் விரிவிப்படுத்தியதில் அவரின் பங்கு அளப்பரியது. இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் பக்தர்களைச் சுற்றியுள்ளது. ஓம் சாந்தி” என மோடி பதிவிட்டுள்ளார்.
தில்லியில் உள்ள கிருஷ்ண பக்திக்கான பன்னாட்டு அமைப்பு (இஸ்கான்) கோபால் கிருஷ்ண கோஸ்வாமி ஞாயிற்றுக்கிழமை காலை 9.20-க்கு மறைந்ததாக அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பிரதமர் மோடி மிகவும் அழகானவர்: டிரம்ப் புகழாரம்
இயக்குநா் பாரதிராஜா மறைவு: திரை பிரபலங்கள் இரங்கல்

பாரதிராஜா மறைவு: குடியரசு துணைத் தலைவா், ஆளுநா் இரங்கல்

பாரதிராஜா மறைவு: சரத்குமார் இரங்கல்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



