அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்
Updated on
1 min read

மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள ஜம்மலமடுகு என்ற இடத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஆந்திரத்தில் மக்களவைத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்துவோம் என்பது எங்கள் உறுதிப்பாடாகும். இதனால் நேரம் மற்றும் ஆற்றல் மிச்சமாகும். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதால் ஆளும் கட்சியால் மக்கள் சோர்வடைந்துள்ளனர்.

எனவே, ஆந்திரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஊழலில் இருந்து மாநிலம் விடுவிக்கப்படும். டைனோசர்கள் பூமியில் இருந்து மறைந்தது போல, நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் இருந்து பெரும் பழமையான கட்சி(காங்கிரஸ்) மறைந்துவிடும். ராகுல்காந்தியை பாகிஸ்தான் புகழ்கிறது. காந்தி வாரிசுகளுக்கு இந்தியாவில் அரசியல் செய்ய தார்மீக உரிமை இல்லை. முன்னாள் பிரதமர் பிவி நரசிம்மராவை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணிதான் அவருக்கு உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது.

மோடியின் தலைமையில் நாட்டில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. மேலும் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகவும் மாற உள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, சட்டப்பிரிவு 370 ரத்து, முத்தலாக் ஒழிப்பு போன்ற வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றியுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com