மக்களவைத் தேர்தல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், 9 மணி வரை பதிவான வாக்கு சதவிகிதத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
குஜராத், கா்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 9 மணி நிலவரப்படி 10.57 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதிகபட்சமாக மேற்கு வங்க மாநிலத்தில் 14.22 சதவிகிதமும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிரத்தில் 6.64 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
பிற மாநிலங்களில்..
அஸ்ஸாம் - 10.12%
சத்தீஸ்கர் - 13.24%
பிகார் - 10.03%
தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ - 10.13%
கோவா - 12.35%
குஜராத் - 9.87%
கர்நாடகம் - 9.45%
மத்திய பிரதேசம் - 14.22%
உத்தர பிரதேசம் - 11.63%