மக்களவை தேர்தலின் 3-ம் கட்ட வாக்குப் பதிவில் ஏறத்தாழ 60.97 சதவிகிதம் வாக்குப் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக அஸ்ஸாமில் 75.01 சதவிகிதமும் குறைந்தபட்சமாக மகாராஷ்டிரத்தில் 53.95 சதவிகிதமும் வாக்குப்பதிவாகியுள்ளது.
3-ம் கட்ட வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை 11 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவுற்றது.
அஸ்ஸாம், மகாராஷ்டிரம் தவிர மற்ற மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு விவரங்கள்:
- பிஹாரில் 56.55 சதவிகித வாக்குப் பதிவு
- சத்தீஸ்கரில் 66.94 சதவிகித வாக்குப் பதிவு
- கோவாவில் 74 சதவிகித வாக்குப் பதிவு
- குஜராத்தில் 56.21 சதவிகித வாக்குப் பதிவு
- கர்நாடகத்தில் 66.80 சதவிகித வாக்குப் பதிவு
- மத்திய பிரதேசத்தில் 62.79 சதவிகித வாக்குப் பதிவு
- உத்தரப் பிரதேசத்தில் 57.04 சதவிகித வாக்குப் பதிவு
- மேற்கு வங்கத்தில் 73.93 சதவிகித வாக்குப் பதிவு
- யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூவில் 65.23 சதவிகிதm வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்னும் மீதமிருக்கும் நான்கு கட்டத் தேர்தலும் முடிவடைந்த பிறகு வாக்கு எண்ணிக்கை ஜுன் 4-ம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது