

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்பட்ட 2023-24ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்ட நிலையில், இன்று பகல் 1 மணியளவில் பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 22.38 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 20.95 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய மொத்த மாணவ, மாணவிகளில் 93.60 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், சென்னையில் 99.30 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்தாண்டை விட இந்தாண்டில் 0.48 சதவீத மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வில் கூடுதலா தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகளை www.cbse.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.