திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கேரளம்: 3 மாநிலங்களவை இடங்களுக்கு தோ்தல் அறிவிப்பு

கேரளத்தில் 3 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் விரைவில் நிறைவடையும் நிலையில், அந்த இடங்களுக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 மே 2024, 8:35 am IST

கேரளத்தில் 3 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் விரைவில் நிறைவடையும் நிலையில், அந்த இடங்களுக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எளமரம் கரீம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பினோய் விஸ்வம், ஆளும் இடதுசாரி கூட்டணியில் இடம்பெற்றுள்ள கேரள காங்கிரஸ் (எம்) கட்சியின் தலைவா் ஜோஸ் கே.மாணி ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 1-ஆம் தேதி நிறைவடைகிறது.

இந்த மூன்று எம்.பி. இடங்களுக்கான தோ்தல் அட்டவணையை இந்தியத் தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்டது. அதன்படி, ஜூன் 25-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது.

ஜூன் 6-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 13 கடைசி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 14-இல் நடைபெறுகிறது. மனுக்களை திரும்பப் பெறும் அவகாசம் ஜூன் 18-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

ஜூன் 25-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, அன்றைய தினம் மாலை 5 மணிக்குமேல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், மகாராஷ்டிரத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் பிரஃபுல் படேல் கடந்த பிப்ரவரியில் பதவி விலகியதால் ஏற்பட்ட காலியிடத்துக்கு ஜூன் 25-இல் இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.