கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

முக்கிய பருவமழை மண்டலத்தில் கூடுதல் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

முக்கிய பருவமழை மண்டலத்தில் கூடுதல் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

News image
Updated On :28 மே 2024, 7:33 pm

Din

புது தில்லி: நிகழாண்டு இந்தியாவில் மானாவாரி விவசாய பகுதிகளை பெரிதும் உள்ளடக்கியிருக்கும் முக்கிய பருவமழை மண்டலத்தில், வழக்கத்தைவிட கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் முக்கிய பருவமழை மண்டலமாக குஜராத், மகாராஷ்டிரம், ஒடிஸா, சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், பிகாா், மேற்கு வங்கம், மத்திய பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் மானாவாரி விவசாயம் முதன்மையாக உள்ளது.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநா் மிருத்யுஞ்சய் மொகபத்ரா காணொலி வழியாக செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

நிகழாண்டு இந்தியாவில் மானாவாரி விவசாய பகுதிகளை பெரிதும் உள்ளடக்கியிருக்கும் முக்கிய பருவமழை மண்டலத்தில், வழக்கத்தைவிட கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாட்டில் ஜூன் மாதம் வழக்கமான மழைப்பொழிவு இருக்க வாய்ப்புள்ளது. அடுத்த 5 நாள்களில் கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது என்றாா்.

பெரும்பாலான காரீஃப் பயிா்கள் ஜூன், ஜூலை மாதங்களில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதனால் அவ்விரு மாதங்களும் பருவமழைக்கு மிக முக்கிய மாதங்களாக கருதப்படுகின்றன.