தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

தந்தை, தம்பியை கொன்று உடலை ஃப்ரிஜ்ஜில் வைத்த சிறுமி!

தந்தை மற்றும் தம்பியை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி ஃப்ரிஜ்ஜில் வைத்த 15 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :30 மே 2024, 6:52 pm IST

மத்திய பிரதேசத்தை சேர்ந்த சிறுமி தனது தந்தை, 8 வயது தம்பியைக் கொன்று, துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை குளிர்சாதன பெட்டியில் அடைத்த நிலையில், சிறுமியை காவல்துறையினர் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கைது செய்தனர்.

19 வயது இளைஞனுடனான உறவை சிறுமியின் தந்தை கண்டித்ததால், தனது தந்தையை கொலை செய்ததாகவும், அதை நேரில் பார்த்த தனது தம்பியும் கொலை செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. தப்பியோடிய 15 வயது சிறுமி கைது செய்யப்பட்ட நிலையில், அவரது 19 வயது காதலன் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இன்னும் தலைமறைவாக உள்ளார்.

ஹரித்வார் காவல் கண்காணிப்பாளர் பிரமேந்திர டோபல் கூறுகையில், அந்தச் சிறுமி, ஹரித்வாரில் காணப்பட்டதை அடுத்து, செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த கொலையை செய்ய அவரது காதலன் உடந்தையாக இருந்துள்ளார். மேலும், திட்டமிட்டு உடல்களை துண்டு, துண்டாக வெட்டி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளனர்.

சிறுமி மத்தியப் பிரதேச காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஆனால், அதே நேரத்தில் அவரது காதலனை தேடும் பணி நடைபெற்று வருகிறது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.