சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் எனும் நேரடி முன்பதிவு மூலமாக தினமும் 10,000 பக்தர்களை அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சபரிமலையில் மண்டல பூஜை, மகரவிளக்கு சீசனையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்த டிசம்பர் 26 ஆம் தேதி நடக்கிறது.
இதற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் வருகிற நவம்பர் 15 ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது. நவ. 16 ஆம் தேதி முதல் பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக, சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஸ்பாட் புக்கிங் எனும் நேரடி முன்பதிவு மூலமாகவும் நாள் ஒன்றுக்கு 10,000 பக்தர்களை அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பம்பை, நிலக்கல், எரிமேலி மற்றும் பீர்மேடு ஆகிய இடங்களில் சாமி தரிசனத்துக்கு பதிவு செய்துகொள்ளலாம்.
இதனால் தினசரி ஆன்லைன் முன்பதிவு 80,000 எண்ணிக்கையில் இருந்து 70,000 ஆகக் குறைக்கப்படுவதாக தேவசம் போர்டு அமைச்சர் வி.என். வாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
'மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70,000 பேர், ஸ்பாட் புக்கிங் அடிப்படையில் 10,000 பேர் என தினமும் 80,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
சபரிமலைக்கு வரும் அனைவரும் தரிசனம் செய்ய வேண்டும் என்ற முதல்வரின் உத்தரவின் அடிப்படையில் ஸ்பாட் புக்கிங் வசதி மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யவில்லை எனில் நேரடியாக வந்து பதிவு செய்து சாமி தரிசனம் செய்யலாம்.
கூட்டத்தை சமாளிக்கவும் பாதுகாப்பிற்காகவும் 13,600 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: மறுஆய்வு மனுக்கள் ஏப். 7-இல் இறுதி விசாரணை
பிரிட்டிஷ் ஒளிபரப்பு பொறியாளர் மறைவு: இரங்கல் தெரிவித்த ஐபிஎல் நிர்வாகம்

சபரிமலை விவகாரத்தில் பிரதமர் மௌனம் காப்பது ஏன்? ராகுல்!

சேலத்தில் வா்த்தக எரிவாயு உருளை விநியோகம் நிறுத்தம்: வீடுகளுக்கான எரிவாயு உருளை புக்கிங் செய்வதிலும் சிக்கல்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


