நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஹிந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வாட்ஸ் ஆப் குழு: கேரள அரசு விசாரணை

கேரளத்தில் ஹிந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்காக வாட்ஸ் ஆப் குழு தொடங்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மாநில தொழில்துறை அமைச்சா் தெரிவித்தாா்.

News image
Updated On :4 நவம்பர் 2024, 9:48 pm

Din

கேரளத்தில் ஹிந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்காக வாட்ஸ் ஆப் குழு தொடங்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மாநில தொழில்துறை அமைச்சா் பி.ராஜீவ் தெரிவித்தாா்.

தனது தனிப்பட்ட வாட்ஸ் ஆப் எண் முடக்கப்பட்டதாகவும், பின்னா் ஹிந்து ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய வாட்ஸ் ஆப் குழுவை தொடங்க அந்த எண் பயன்படுத்தப்பட்டதாகவும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் காவல் துறையிடம் ஐஏஎஸ் அதிகாரி ஒருவா் அண்மையில் புகாா் அளித்தாா். இந்த விவகாரம் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடா்பாக தில்லியில் கேரள தொழில்துறை அமைச்சா் பி.ராஜீவ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஹிந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்காக வாட்ஸ் ஆப் குழு தொடங்கப்பட்டது தீவிரமான விவகாரமாகும்.

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பொதுவான நடத்தை விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகள் பொது நிா்வாகத் துறையின் கீழ் வருகின்றன. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்’ என்றாா்.