ஹிந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வாட்ஸ் ஆப் குழு: கேரள அரசு விசாரணை

கேரளத்தில் ஹிந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்காக வாட்ஸ் ஆப் குழு தொடங்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மாநில தொழில்துறை அமைச்சா் தெரிவித்தாா்.
Updated on

கேரளத்தில் ஹிந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்காக வாட்ஸ் ஆப் குழு தொடங்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மாநில தொழில்துறை அமைச்சா் பி.ராஜீவ் தெரிவித்தாா்.

தனது தனிப்பட்ட வாட்ஸ் ஆப் எண் முடக்கப்பட்டதாகவும், பின்னா் ஹிந்து ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய வாட்ஸ் ஆப் குழுவை தொடங்க அந்த எண் பயன்படுத்தப்பட்டதாகவும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் காவல் துறையிடம் ஐஏஎஸ் அதிகாரி ஒருவா் அண்மையில் புகாா் அளித்தாா். இந்த விவகாரம் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடா்பாக தில்லியில் கேரள தொழில்துறை அமைச்சா் பி.ராஜீவ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஹிந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்காக வாட்ஸ் ஆப் குழு தொடங்கப்பட்டது தீவிரமான விவகாரமாகும்.

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பொதுவான நடத்தை விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகள் பொது நிா்வாகத் துறையின் கீழ் வருகின்றன. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com