பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

இசை நிகழ்ச்சியில் கோழியைக் கொன்று ரத்தம் குடித்த பாடகர் மீது வழக்குப் பதிவு!

அருணாசல பிரதேசத்தை சேர்ந்த இசைக்கலைஞர் கோன் வய் சோனம் கோழியைக் கொன்று ரத்தத்தைக் குடித்தவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

News image

கோன்யோ வய் சோனம்

படங்கள்: இன்ஸ்டா / கோன் வாய் சோனம்

Updated On :5 நவம்பர் 2024, 3:56 pm

DIN

அருணாசல பிரதேசத்தை சேர்ந்த இசைக் கலைஞர் கோன்யோ வய் சோனம் (கோன் வய் சன்) கோழியைக் கொன்று ரத்தத்தைக் குடித்ததற்காக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

அக்.27ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து பீட்டா அமைப்பினர் இட்டாநகர் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

நாட்டுப்புறப் பாடல் எழுத்தாளர், இசையமைப்பாளர் என பன்முக திறமைசாலியாக அறியப்படுகிறார் கோன்யோ வய் சோனம் யூடியூப்பில் பிரபலமானவராக அறியப்படுகிறார். சட்டப் பிரிவு 325 /11இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிஎஸ்பி ரோஹித் ராஜ்பிர் சிங், “கோன் சன் விரைவில் விசாரணையில் கலந்துகொள்வார்” எனக் கூறியுள்ளார்.

அந்தப் பகுதியில் இந்த சம்பவம் பேசுபொருளானதைத் தொடர்ந்து அவர் மன்னிப்பும் கேட்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். அதற்காக இன்ஸ்டாகிராமில் மன்னிப்பு கடிதமும் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள், “எந்த விலங்கும் துன்புறுத்தப்படவில்லை. நேரடியாக எந்த விலங்கும் கொல்லப்படவுமில்லை” எனக் கூறியுள்ளார்கள்.

இது குறித்து பீட்டா அமைப்பினர் கூறியதாவது:

மக்களிடம் அதிர்ச்சியை உண்டாக்க விரும்பி மிருகங்களைத் துன்புறுத்துவது மிகவும் தவறான செயல். அதற்கு வேறு வேலையை பார்த்துக் கொள்ளலாம். உண்மையான கலைஞர்கள் அவர்களது திறமையை மட்டுமே நம்புவார்கள்.

எந்த வகையிலும் விலங்குகளை துன்புறுத்துவது ஏற்கத்தக்கதல்ல. விலங்கினை துன்புறுத்துபவர்கள் விரைவில் மனிதர்களையும் துன்புறுத்துவார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன.

3 முறைக்கு மேல் விலங்குகளை துன்புறுத்துபவர்கள் கொலை, கொள்ளை, மிரட்டல், துன்புறுத்தல், போதை பழக்க மோசடிகளில் ஈடுபடுவதாக தடயவியல் ஆராய்ச்சி, குற்றவியல் சர்வதேச இதழில் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.