அருணாசல பிரதேசத்தை சேர்ந்த இசைக் கலைஞர் கோன்யோ வய் சோனம் (கோன் வய் சன்) கோழியைக் கொன்று ரத்தத்தைக் குடித்ததற்காக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
அக்.27ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து பீட்டா அமைப்பினர் இட்டாநகர் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
நாட்டுப்புறப் பாடல் எழுத்தாளர், இசையமைப்பாளர் என பன்முக திறமைசாலியாக அறியப்படுகிறார் கோன்யோ வய் சோனம் யூடியூப்பில் பிரபலமானவராக அறியப்படுகிறார். சட்டப் பிரிவு 325 /11இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிஎஸ்பி ரோஹித் ராஜ்பிர் சிங், “கோன் சன் விரைவில் விசாரணையில் கலந்துகொள்வார்” எனக் கூறியுள்ளார்.
அந்தப் பகுதியில் இந்த சம்பவம் பேசுபொருளானதைத் தொடர்ந்து அவர் மன்னிப்பும் கேட்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். அதற்காக இன்ஸ்டாகிராமில் மன்னிப்பு கடிதமும் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள், “எந்த விலங்கும் துன்புறுத்தப்படவில்லை. நேரடியாக எந்த விலங்கும் கொல்லப்படவுமில்லை” எனக் கூறியுள்ளார்கள்.
இது குறித்து பீட்டா அமைப்பினர் கூறியதாவது:
மக்களிடம் அதிர்ச்சியை உண்டாக்க விரும்பி மிருகங்களைத் துன்புறுத்துவது மிகவும் தவறான செயல். அதற்கு வேறு வேலையை பார்த்துக் கொள்ளலாம். உண்மையான கலைஞர்கள் அவர்களது திறமையை மட்டுமே நம்புவார்கள்.
எந்த வகையிலும் விலங்குகளை துன்புறுத்துவது ஏற்கத்தக்கதல்ல. விலங்கினை துன்புறுத்துபவர்கள் விரைவில் மனிதர்களையும் துன்புறுத்துவார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன.
3 முறைக்கு மேல் விலங்குகளை துன்புறுத்துபவர்கள் கொலை, கொள்ளை, மிரட்டல், துன்புறுத்தல், போதை பழக்க மோசடிகளில் ஈடுபடுவதாக தடயவியல் ஆராய்ச்சி, குற்றவியல் சர்வதேச இதழில் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அனுமதியின்றி கிராவல் மண் வெட்டி எடுப்பு: 4 போ் மீது வழக்குப் பதிவு
திமுக நினைத்திருந்தால் விஜய் மீது வழக்குப் பதிவு செய்திருக்க முடியும்: முன்னாள் அமைச்சா் சிவசங்கா்

சிறுமியின் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்தியதால் விநாயகன் மீது வழக்குப் பதிவு!
லஞ்சம்: ஒசூா் மாநகராட்சி உதவி ஆணையா் உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



