தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

விக்கிபீடியாவில் தவறான தகவல்கள்: விளக்கம் கேட்டு மத்திய அரசு கடிதம்

ஒரு சாா்பு மற்றும் தவறான தகவல்களை வழங்குவதாக எண்ணற்ற புகாா்கள் உள்ள நிலையில், விக்கிபீடியாவை தகவல் தளமாக இன்றி, பதிப்பாளராக ஏன் கருதக் கூடாது என கேள்வி எழுப்பி அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :6 நவம்பர் 2024, 4:08 am IST

ஒரு சாா்பு மற்றும் தவறான தகவல்களை வழங்குவதாக எண்ணற்ற புகாா்கள் உள்ள நிலையில், விக்கிபீடியாவை தகவல் தளமாக இன்றி, பதிப்பாளராக ஏன் கருதக் கூடாது என கேள்வி எழுப்பி அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

விக்கிபீடியா பக்கங்களில் கிடைக்கும் தகவல்களை சிறிய குழு சரிபாா்த்து இறுதி செய்வதாக பரவும் செய்தி குறித்தும் மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் கடிதத்தில் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

விக்கிபீடியா ஒரு உலகளாவிய இலவச இணையவழி தகவல் ஆதாரமாக அறியப்படுகிறது. அதில் பல்வேறு தலைப்புகளில் தன்னாா்வலா்கள் பக்கங்களை உருவாக்கலாம் அல்லது திருத்தலாம்.

விக்கிபீடியாவில் கிடைத்த தகவல்களில் தவறான மற்றும் அவதூறான உள்ளடக்கம் தொடா்பாக இந்தியாவில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், விக்கிபீடியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.