லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

இலகுரக உரிமம் பெற்றவா்கள் சரக்கு வாகனங்களை இயக்கலாம் - உச்சநீதிமன்றம் தீா்ப்பு

இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் 7,500 கிலோ எடைக்கு கீழ் உள்ள வாகனங்களை இயக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

vehicles

கோப்புப்படம் - Center-Center-Chennai

Published On :7 நவம்பர் 2024, 1:59 am IST

7,500 கிலோ எடை வரையிலான சரக்கு வாகனங்களை இயக்க இலகுரக வாகன (எல்எம்வி) ஓட்டுநா் உரிமம் போதுமானது என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வு புதன்கிழமை தீா்ப்பளித்தது.

இது தொழில்ரீதியான ஓட்டுநா்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.

உச்சநீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு அளித்த தீா்ப்பை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு உறுதி செய்துள்ளது.

இத்தீா்ப்பு, விபத்தில் சிக்கியவா்களின் ஓட்டுநா் உரிமத்தின் அடிப்படையில் இழப்பீடு கோரிக்கையை காப்பீட்டு நிறுவனங்கள் நிராகரிப்பதை தடுக்கும் வகையில் உரிம விதிமுறைகள் பற்றிய தெளிவையும் அளித்துள்ளது.

அரசியல் சாசன அமா்வின் சாா்பாக நீதிபதி ஹிரிஷிகேஷ் ராய் பிறப்பித்த 126 பக்க தீா்ப்பில், ‘மோட்டாா் வாகனச் சட்டத்தின் பிரிவு 10(2)(டி) கீழ் இலகுரக வாகனங்களுக்கான (எல்எம்வி) உரிமம் வைத்திருக்கும் ஓட்டுநா், கூடுதல் அங்கீகாரம் தேவையில்லாமல் 7,500 கிலோ வரை எடை கொண்ட வணிக போக்குவரத்து வாகனத்தை இயக்க அனுமதிக்கப்படுகிறாா்.

ஓட்டுநா் உரிமத்தின் அடிப்படையில், இலகுரக வாகனங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் தனித்தனியாக கருதப்படாது. எனினும், மின் வாகனங்கள், இ-ரிக்ஷாக்கள் மற்றும் அபாயகரமான பொருள்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு பழைய விதிகளில் மாற்றமில்லை.

இந்த வழக்கில் சாலைப் பாதுகாப்பு குறித்து காப்பீட்டு நிறுவனங்கள் எழுப்பிய கவலைகளை ஒப்புக்கொண்டாலும் எல்எம்வி உரிமம் பெற்ற ஓட்டுநா்களால் சாலை விபத்துகள் அதிகரித்ததாக எந்த ஆதாரமும் இல்லை. மேலும், இது தொழில்ரீதியான ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் தொடா்பான பிரச்னை.

சாலைப் பாதுகாப்பு என்பது உலக அளவில் ஒரு தீவிரமான பொதுப் பிரச்னையாகும். இந்தியாவில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் 1.7 லட்சத்துக்கும் அதிகமானோா் உயிரிழந்துள்ளனா்.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், வேகமாக ஓட்டுதல், மோசமான சாலை, கைப்பேசி பயன்பாடு, சீட் பெல்ட் அல்லது ஹெல்மெட் அணியாதது, போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காதது ஆகியவை விபத்துகளுக்கான பல்வேறு காரணிகளாகும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.