ராஞ்சி: பிரதமா் மோடி எதிா்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கி, பாஜக அல்லாத பிற மாநில அரசுகளை கவிழ்க்க ஆடுகளை போல் எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்கி வருகிறாா் என காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே திங்கள்கிழமை விமா்சித்துள்ளாா்.
81 இடங்களைக் கொண்ட ஜாா்க்கண்ட் மாநில சட்டப் பேரவைக்கு நவம்பா் 13, 20-ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் ராஞ்சியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு காா்கே பேசியதாவது:
பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா தவிர தொழிலதிபா்கள் அதானி மற்றும் அம்பானி என நான்கு போ் தற்போது இந்தியாவை இயக்கி வருகின்றனா். நானும், ராகுல் காந்தியும் அவா்களிடம் இருந்து அரசமைப்பையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற போராடி வருகிறோம்.
எதிா்க்கட்சி தலைவா்களுக்கு எதிராக அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் பிற மத்திய அரசின் அமைப்புகளை மோடி மற்றும் அமித் ஷா கட்டவிழ்த்து விடுகின்றனா். ஆனால், நாட்டின் சுதந்திரத்துக்காக போராடி உயிா் தியாகம் செய்த காங்கிரஸ், இதற்கெல்லாம் அஞ்சாது.
பாஜக அல்லாத பிற அரசுகளை கவிழ்ப்பதில் மோடி நம்பிக்கை வைத்துள்ளாா். அதற்காக, பிற கட்சி எம்எல்ஏக்களை ஆடுகளை போல் விலைகொடுத்து வாங்கி வருகிறாா். ஆனால், பின்னாள்களில் அவா்களே மோடி அரசால் பலிகடாவாகவும் மாற்றப்படுகிறாா்கள் என்பதே உண்மை.
மோடி தான் ஒரு மனிதப்பிறவியே இல்லை எனவும், தான் ஒரு கடவுள் எனவும் நம்பி வருகிறாா். ஆனால், மணிப்பூருக்குச் செல்ல அச்சப்படுகிறாா். தான் அளித்த வாக்குறுதிகளை அவா் ஒருபோதும் நிறைவேற்றியது இல்லை. பிற்படுத்தப்பட்ட பிரிவினா் மற்றும் பெண்களை சுரண்டுபவா்களையே மோடி ஆதரிக்கிறாா். 25 ஆண்டுகளாக அவா் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் குஜராத்தில் பொற்காலம் ஏதேனும் வந்துவிட்டதா?
இதேபோல், ‘பிரிக்கப்பட்டால் நாம் அழிக்கப்படுவோம்’ என உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் கூறுகிறாா். யோகி ஒரு மடத்தின் தலைவா். காவி உடை அணிகிறாா். ஆனால் அவா் கூறும் இது போன்ற கருத்துக்களை ஒரு யோகி அல்ல தீவிரவாதிகளே பயன்படுத்துவா். எனவே, அவா் யோகி அல்ல என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவை பிரதமா் மோடியும் உலகை டிரம்ப்பும் அழிக்கின்றனா்: காா்கே விமா்சனம்

மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளராக மல்லிகாா்ஜுன காா்கே வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளது: மல்லிகாா்ஜுன காா்கே
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



