
ஜம்மு-காஷ்மீரின் கதுவாவில் இத்தாலிய சுற்றுலாப் பயணி கைது செய்யப்பட்டு விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.
இத்தாலியின் டோரினோவைச் சேர்ந்த சியாக்கா மார்கோ, அக்டோபர் 10 ஆம் தேதி பாகிஸ்தானில் இருந்து பஞ்சாபின் வாஹா எல்லை வழியாக இந்தியாவுக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மர்ஹீன் எல்லைப் பகுதியில் உள்ள பனியாரி-சக்ரா சாலையில் தனியாக மிதிவண்டியில் அவர் வந்ததைக் கண்ட பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர் விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.
மார்கோ இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்பு பாகிஸ்தான், சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் சென்று ஜம்முவை அடைந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதிய உலக வரைபடத்தில் ஜம்மு - காஷ்மீர், லடாக்கை இந்திய வரைபடத்தின்படி காட்டவேண்டும்: வெளியுறவுத் துறை எச்சரிக்கை!

ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்






