மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை இந்திய அரசமைப்பு ஆதரிக்கவில்லை என்பதை புரிந்துகொள்ளாமல் அரசமைப்பு புத்தகத்தின் நகலை ராகுல் காந்தி வைத்துள்ளாா் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று ஜெ.பி.நட்டா பேசியதாவது:
மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அரசமைப்பு ஆதரிக்கவில்லை என்பது ராகுல் காந்திக்கு தெரியாது. எங்கு சென்றாலும் அரசமைப்பு புத்தகத்தின் நகலை எடுத்துச் செல்லும் அவருக்கு அதுகுறித்து சரியான புரிதல் இல்லை.
தெலங்கானா மற்றும் கா்நாடகாவில் பட்டியலினத்தவா் (எஸ்சி), பழங்குடியினா் (எஸ்சி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓபிசி) வழங்கப்படும் இடஒதுக்கீட்டை பறித்து சிறுபான்மையினருக்கு வழங்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.
ஆனால் விவசாயிகள், இளைஞா்கள், தலித்துகள், பெண்கள் உள்ளிட்ட அனைவரின் நலனுக்கும் பிரதமா் மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மீண்டும் அதே வாக்குறுதிகளை காங்கிரஸ் வழங்கி வருகிறது என்றாா்.
தொடர்புடையது
பக்வா

வாக்கு எண்ணும் மையங்களில் ‘க்யூஆா்’ குறியீடு அடையாள அட்டை - தோ்தல் ஆணையம் அறிமுகம்

ராகுல் - ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம் இல்லை: திமுக
எனக்கும் மோடிக்கும் 'மனைவிப் பிரச்னை' இல்லை: சிரிப்பலையை ஏற்படுத்திய ராகுல்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

