மகா விகாஸ் அகாடி 175 இடங்களில் வெற்றி பெறும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், சரத் பவார், உத்தவ் தாக்கரே, அனைவரும் வெற்றி பெற்று மகாராஷ்டிரத்தை காப்பாற்றுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். மகா விகாஸ் அகாடி சுமார் 175 இடங்களை வெல்வார்கள்.
ஒட்டுமொத்த நாடும் மகாராஷ்டிரத்தைப் பின்பற்றுகிறது. மகாராஷ்டிரத்துக்கு முன்மாதிரியாக கர்நாடகம் உள்ளது. கர்நாடக அரசு 5 உத்தரவாத திட்டங்களை செயல்படுத்தவில்லை என, மகாராஷ்டிர அரசு விளம்பரம் கொடுத்துள்ளது. உண்மையில், நாங்கள் 5 உத்தரவாத திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளோம்.
2023 மே 20 அன்று நாங்கள் ஆட்சிக்கு வந்தோம், முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே 5 திட்டங்களையும் செயல்படுத்தினோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 288 பேரவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரத்தில் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி ஒரேகட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
தேர்தலில் மஹாயுதி ஒரு அணியாகவும், மகா விகாஸ் அகாடி மற்றொரு அணியாகவும் களத்தில் உள்ளன. தேர்தலையொட்டி அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் இறுதி கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர்
இழுபறியில் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்! தில்லி சென்றார் முதல்வர் சிவகுமார்!

40 நாள்களாகியும் நிரப்பப்படாத கர்நாடக அமைச்சரவை! முதல்வர் சிவகுமார் விரைவில் தில்லி பயணம்!







