மகா விகாஸ் அகாடி 175 இடங்களில் வெற்றி பெறும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், சரத் பவார், உத்தவ் தாக்கரே, அனைவரும் வெற்றி பெற்று மகாராஷ்டிரத்தை காப்பாற்றுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். மகா விகாஸ் அகாடி சுமார் 175 இடங்களை வெல்வார்கள்.
ஒட்டுமொத்த நாடும் மகாராஷ்டிரத்தைப் பின்பற்றுகிறது. மகாராஷ்டிரத்துக்கு முன்மாதிரியாக கர்நாடகம் உள்ளது. கர்நாடக அரசு 5 உத்தரவாத திட்டங்களை செயல்படுத்தவில்லை என, மகாராஷ்டிர அரசு விளம்பரம் கொடுத்துள்ளது. உண்மையில், நாங்கள் 5 உத்தரவாத திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளோம்.
2023 மே 20 அன்று நாங்கள் ஆட்சிக்கு வந்தோம், முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே 5 திட்டங்களையும் செயல்படுத்தினோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 288 பேரவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரத்தில் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி ஒரேகட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
தேர்தலில் மஹாயுதி ஒரு அணியாகவும், மகா விகாஸ் அகாடி மற்றொரு அணியாகவும் களத்தில் உள்ளன. தேர்தலையொட்டி அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் இறுதி கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்

திமுக அமோக வெற்றி பெறும்: அமைச்சா் ரா. ராஜேந்திரன்

200- க்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும்: திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின்

காங்கிரஸ் கட்சி ஸ்டாலின் பக்கம்தான் இருக்கிறது! - கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

