கேரள மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 57 ஆக உயர்ந்த கேரள அரசு ஆலோசித்து வருகிறது.
அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை மாற்றியமைக்க பல்வேறு அரசுப்பங்குதாரர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.
புதிய நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் பிப்ரவரியில் மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தாக்கல் செய்யப்படும்போது இந்த அறிவிப்பினை வெளியிடப்படும் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசு ஊழியர்கள் 56 வயதில் ஓய்வுபெறும் ஒரே மாநிலம் கேரளம். உம்மன் சாண்டி ஆட்சிக் காலத்தில்(2011-16) அனைத்து அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, வரன்முறைப்படுத்த ஓய்வு பெறும் வயதை 55 யிலிருந்து 56 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 57 ஆக மாற்றியமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
2025 ஆம் ஆண்டின் பிற்பாதியில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2026 ஏப்ரலில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த நடவடிக்கை முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசின் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தில்லியிலிருந்து விமானத்தை தவறவிட்ட பினராயி விஜயன்: கேரள இல்ல உபசரணை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை!

பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்

கேரளம்: பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்

பல்கலை. பேராசிரியா்கள் ஓய்வுபெறும் வயதை 65-ஆக உயா்த்தக் கோரிய மனு: அரசு பரிசீலிக்க உத்தரவு
விடியோக்கள்
Gutta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK



