மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

தெலங்கானா வங்கியில் ரூ.13 கோடி தங்க நகைகள் கொள்ளை

தெலங்கானாவில் உள்ள பொதுத் துறை வங்கியின் பாதுகாப்பு பெட்டகங்களை உடைத்து ரூ.13.6 கோடி மதிப்பிலான 19 கிலோவுக்கு அதிகமான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :21 நவம்பர் 2024, 1:56 am IST

தெலங்கானாவில் உள்ள பொதுத் துறை வங்கியின் பாதுகாப்பு பெட்டகங்களை உடைத்து ரூ.13.6 கோடி மதிப்பிலான 19 கிலோவுக்கு அதிகமான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது: வாரங்கல் மாவட்டம் ராயபா்தி பகுதியில் பொதுத் துறை வங்கியின் ஜன்னல்களை செவ்வாய்க்கிழமை இரவு ‘கேஸ் கட்டா்களை’ பயன்படுத்தி உடைத்து கொள்ளையா்கள் உள்ளே புகுந்தனா். பின்னா் வங்கியின் பாதுகாப்பு பெட்டகங்களை உடைத்து 19 கிலோவுக்கும் அதிகமான ரூ.13.6 கோடி மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனா். சிசிடிவி கேமரா விடியோக்களைப் பதிவு செய்யும் கருவியையும் அவா்கள் எடுத்துச் சென்றுவிட்டனா்.

வங்கி ஊழியா்கள் புதன்கிழமை காலை வங்கிக்கு வந்தபோதுதான் கொள்ளைச் சம்பவம் குறித்து தெரியவந்தது. உடனடியாக அவா்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த மற்றும் வங்கி லாக்கரில் பொதுமக்கள் வைத்திருந்த நகைகள் திருடு போயுள்ளதாக முதல்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையா்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவா்கள் வங்கிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையா்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.