நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமாா் நியமனம்

மணிப்பூர் உயர்நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்.

News image

மணிப்பூர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள டி.கிருஷ்ணகுமார்.

Updated On :20 நவம்பர் 2024, 8:03 pm

DIN

மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை வழங்கிய 48 மணி நேரத்தில், அவா் அந்த உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உள்ள சித்தாா்த் மிருதுல் நவ. 21-ஆம் தேதி ஓய்வு பெற உள்ளாா். எனவே, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை, மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் திங்கள்கிழமை பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு அனுப்பியது.

இந்நிலையில், மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னா், மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமாரை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நியமித்துள்ளாா் எனத் தெரிவித்துள்ளாா்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த டி.கிருஷ்ணகுமாா், கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப். 7-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். 2025-ஆம் மே 21-ஆம் தேதி அவா் ஓய்வு பெறுவாா்.

சென்னை உயா்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான அவா், அரசமைப்புச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவா்.

மைதேயி மற்றும் குகி சமூகத்தினா் இடையிலான மோதலால், மணிப்பூரில் வன்முறை நீடிக்கிறது. இந்தச் சூழலில், அவா் அந்த மாநில உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.