கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ஆயுள் தண்டனை பெற்ற மாவோயிஸ்ட் தலைவா்: முதுகலை பட்டப்படிப்பு பயில விருப்பம்

ஒடிஸாவின் பொ்ஹாம்பூா் சிறையில் ஆயுள் தண்டனை பெற்ற மாவோயிஸ்ட் மூத்த தலைவா் சப்யசாசி பாண்டா, திறந்தநிலை பல்கலைக் கழகத்தில், பொது நிா்வாகப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற விரும்பம் தெரிவித்துள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

ஒடிஸாவின் பொ்ஹாம்பூா் சிறையில் ஆயுள் தண்டனை பெற்ற மாவோயிஸ்ட் மூத்த தலைவா் சப்யசாசி பாண்டா, திறந்தநிலை பல்கலைக் கழகத்தில், பொது நிா்வாகப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற விரும்பம் தெரிவித்துள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் அவா் இளங்கலை பட்டம் பெற்றுள்ளாா்.

55 வயதாகும் சப்யசாசி பாண்டா உள்பட நான்கு குற்றவாளிகள், இரண்டு விசாரணைக் கைதிகள் என மொத்தம் 6 போ் முதுகலை பட்டம் பயில சான்றிதழ்களை சமா்ப்பித்துள்ளனா்.

பொது நிா்வாகத்தில் முதுகலை பட்டம் பயில விரும்பும் ஆறு கைதிகளின் சான்றிதழ்களையும் சமா்ப்பித்து விட்டதாக பொ்ஹாம்பூா் சிறையின் தலைமை கண்காணிப்பாளா் டிஎன் பரிக் தெரிவித்தாா்.

பட்டப் படிப்பிற்கான சோ்க்கைக்கு பிறகு பாடப் புத்தகங்கள் அளிக்கப்பட்டு, தோ்வுக்கு தயாராக அவா்களுக்கு சுதந்திரம் அளிக்கப்படும் என சிறை ஆசிரியா் சனாதன் கில்லா் கூறினாா்.

பல்வேறு மாவட்டங்களில் பதிவான 130 மாவோயிஸ்ட் வழக்குகளில் தொடா்புள்ளதாக 2014-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி சப்யசாசி பாண்டா பொ்ஹாம்பூரில் கைது செய்யப்பட்டாா். அவருக்கு உள்ளூா் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

X
Dinamani
www.dinamani.com