மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவாளர்கள், எங்கும் கூட்டமாக கூட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருப்பது, அவரது ஆதரவாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மகாராஷ்டிர முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலும் சரி, அலுவலகம் என எங்கும் தனது ஆதரவாளர்கள் கூட வேண்டாம் என்று செவ்வாய்க்கிழமை காலை ஏக்நாத் ஷிண்டே கேட்டுக்கொண்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில், மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. ஒன்றாக இணைந்துப் போட்டியிட்டு வென்றுள்ளோம். இப்போதும் ஒன்றாக இருக்கிறோம்.
என் மீது இருக்கும் அன்பு காரணமாக, ஆதரவாளர்கள் மும்பை நோக்கி வருவதோ, கூட்டம் கூடுவதோ வேண்டாம். என் மீதிருக்கும் அன்புக்கு நன்றி. எனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதற்காக நான் இருக்கும் இடத்துக்கு வர வேண்டாம் என்று எக்ஸ் பக்கத்தில் வலியுறுத்தியிருக்கிறார்.
மகாராஷ்டிர மாநில பேரவைத் தோ்தலில் ஆளும் பாஜக-முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை-துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அடங்கிய ‘மகாயுதி’ கூட்டணி மொத்தமுள்ள 288 இடங்களில் 230 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. எதிா்க்கட்சியான மகா விகாஸ் அகாடி கூட்டணி 46 இடங்களை மட்டுமே வென்றது.
ஆளும் கூட்டணியில் 132 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக சாா்பில் துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வா் போட்டியில் முன்னணியில் இருக்கிறாா். பாஜகவுக்கு அடுத்து சிவசேனை 57, தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களில் வென்றுள்ளன.
இந்நிலையில், புதிய முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை தனது தரப்பு முடிவை இன்னும் தெளிவுபடுத்தவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி!

ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனையில் இணைந்த உத்தவ் கட்சியின் 6 எம்.பி.க்கள்: மகாராஷ்டிர அரசியலில் திருப்பம்

கட்சித் தலைவா் பதவியை ராஜிநாமா செய்யத் தயாா்: உத்தவ் தாக்கரே

ஆபரேஷன் டைகர்! உத்தவ் அணியிலிருந்து ஷிண்டே அணியில் இணையும் 7 எம்.பி.க்கள், 16 எம்.எல்.ஏ.க்கள்?
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



