‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

தயவு செய்து... ஏக்நாத் ஷிண்டே வைத்த கோரிக்கை! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்

தயவு செய்து கூட்டம் கூட வேண்டாம் என்று ஏக்நாத் ஷிண்டே கோரிக்கை வைத்துள்ளார்

News image

ஏக்நாத் ஷிண்டே - ANI

Updated On :26 நவம்பர் 2024, 11:31 am IST

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவாளர்கள், எங்கும் கூட்டமாக கூட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருப்பது, அவரது ஆதரவாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மகாராஷ்டிர முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலும் சரி, அலுவலகம் என எங்கும் தனது ஆதரவாளர்கள் கூட வேண்டாம் என்று செவ்வாய்க்கிழமை காலை ஏக்நாத் ஷிண்டே கேட்டுக்கொண்டுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில், மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. ஒன்றாக இணைந்துப் போட்டியிட்டு வென்றுள்ளோம். இப்போதும் ஒன்றாக இருக்கிறோம்.

என் மீது இருக்கும் அன்பு காரணமாக, ஆதரவாளர்கள் மும்பை நோக்கி வருவதோ, கூட்டம் கூடுவதோ வேண்டாம். என் மீதிருக்கும் அன்புக்கு நன்றி. எனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதற்காக நான் இருக்கும் இடத்துக்கு வர வேண்டாம் என்று எக்ஸ் பக்கத்தில் வலியுறுத்தியிருக்கிறார்.

மகாராஷ்டிர மாநில பேரவைத் தோ்தலில் ஆளும் பாஜக-முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை-துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அடங்கிய ‘மகாயுதி’ கூட்டணி மொத்தமுள்ள 288 இடங்களில் 230 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. எதிா்க்கட்சியான மகா விகாஸ் அகாடி கூட்டணி 46 இடங்களை மட்டுமே வென்றது.

ஆளும் கூட்டணியில் 132 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக சாா்பில் துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வா் போட்டியில் முன்னணியில் இருக்கிறாா். பாஜகவுக்கு அடுத்து சிவசேனை 57, தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களில் வென்றுள்ளன.

இந்நிலையில், புதிய முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை தனது தரப்பு முடிவை இன்னும் தெளிவுபடுத்தவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.