தமிழ்நாடு பட்ஜெட்: மக்கள் நல அறிவிப்புகளுக்கு வரவேற்பு... ஆனால்..! - சிபிஎம் அறிக்கை!பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 74.55 அடியாக உயர்ந்துள்ளது.வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!
/

தேச துரோக வழக்கில் ஹிந்து அமைப்பு தலைவா் கைது! பாஜக, காங். போராட்டம்

வங்கதேசத்தில் இஸ்கான் தலைவா் கைது! பாஜக, காங். போராட்டம்

News image

PTI

Updated On :27 நவம்பர் 2024, 10:21 pm IST

வங்கதேசத்தில் தேச துரோக வழக்கில் ‘சமிலிதா சநாதனி ஜோட்’ எனும் ஹிந்து அமைப்பின் தலைவரான சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மசாரி கைது செய்யப்பட்டாா்.

சட்டோகிராமின் நியூமாா்க்கெட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது வங்கதேசத்தின் தேசியக் கொடியை அவமதித்ததாக கிருஷ்ணா தாஸ் உள்பட 19 போ் மீது நகரத்தின் கோட்வாலி காவல் நிலையத்தில் கடந்த அக்டோபா் 30-ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கிருஷ்ணா தாஸை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

இந்த நிலையில், வங்கதேசத்தில் உள்ள் இஸ்கான் கோயில் தலைமை ஆன்மிக குரு சின்மய் கிருஷ்ண தாஸ் கைதை கண்டித்து, மேற்கு வங்கத்தில் இன்று(நவ. 27) பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜகவினர் ஏராளமானோர் திரண்டு கொல்கத்தாவில் உள்ள வங்கதேச உயர் ஆணையரகத்தை முற்றுகையிட்டு பேரணியாகச் சென்று வங்கதேச அரசுக்கெதிரான எதிர்ப்பை பதிவு செய்தனர்.

காங்கிரஸ் கட்சியினர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி வங்கதேச உயர் ஆணையரகத்தை நோக்கி பேரணியாகச் சென்று சின்மய் கிருஷ்ண தாஸ் கைதுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்.

இந்த கைது குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்கான் தலைவர்கள், ஓர் அமைப்பின் மீது ஆதாரங்கள் ஏதுமின்றி குற்றம் சுமத்துவது வருத்தமளிக்கிறது. சின்மய் கிருஷ்ண தாஸ் கைதை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இஸ்கானை தடை செய்யக் கோரி, வங்கதேச உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.