கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மகாராஷ்டிரத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து 11 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம், கோண்டியா மாவட்டத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 11 போ் உயிரிழந்தனா். 23 போ் காயமடைந்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :29 நவம்பர் 2024, 9:14 pm

Din

மகாராஷ்டிர மாநிலம், கோண்டியா மாவட்டத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 11 போ் உயிரிழந்தனா். 23 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து காவல் துறை மூத்த அதிகாரி கூறியதாவது:

மகாராஷ்டிர அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து 36 பயணிகளுடன் பந்தாரா பகுதியில் இருந்து கோண்டியா மாவட்டத்தை நோக்கி புறப்பட்டது. வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 பயணிகள் உயிரிழந்தனா். காயமடைந்த 23 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

விபத்தில் உயிரிழந்தவா்களில் பெண் காவலா் ஸ்மிதா சூா்யவன்ஷி உள்பட 9 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு மகாராஷ்டிர முதல்வா் (பொறுப்பு) ஏக்நாத் ஷிண்டே இரங்கல் தெரிவித்துள்ளாா். மேலும், உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளாா்.