நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தில்லியில் மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது: பாஜக தேசிய பொதுச்செயலர்

தில்லிக்கு திறமையான மற்றும் முற்போக்கான அரசு தேவை..

News image

பாஜக தேசிய பொதுச் செயலாளர் துஷ்யந்த் குமார் கௌதம்

Updated On :3 அக்டோபர் 2024, 11:22 am

பிடிஐ

தில்லியில் சாலைகள் மோசமடைந்து வருவதற்கும், மாசு அதிகரிப்பதற்கும் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தான் பொறுபபு என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் துஷ்யந்த் குமார் கௌதம் விமர்சித்தார்.

விவேக் விஹார் நியூ பிரண்ட்ஸ் காலனியில் உள்ள சுரங்கப்பாதையை பாஜக தொண்டர்களுடன் இணைந்து சேதமடைந்த சாலைகளை துஷ்யந்த் குமார் ஆய்வு செய்தார். அப்போது கௌதம் கூறுகையில்,

தலைநகரில் உள்ள சாலைகளில் பழுதும், காற்று மாசும் நிறைந்துள்ளது, இதற்கு கேஜரிவால் மட்டுமே பொறுப்பு. புதிய பள்ளிகளையோ, மருத்துவமனைகளையோ அவர் கட்டவில்லை நகரில் வளர்ச்சியைக் கொண்டுவரத் தவறிவிட்டார்.

மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. தில்லிக்கு திறமையான மற்றும் முற்போக்கான அரசு தேவை. மேலும் நகரத்தின் வளர்ச்சியை உறுதிசெய்யும் ஒரே கட்சி பாஜக மட்டுமே. எனவே வரவிருக்கும் பேரவைத் தேர்தலில் பாஜகவை ஆதரிக்குமாறு வாக்காளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் கேஜரிவாலை ஆட்சியிலிருந்து அகற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். வளர்ச்சியை முன்னோக்கிக் கொண்டு செல்ல இரட்டை இயந்திர அரசு வழிவகுக்கும்.

பாஜகவின் தலைமையின் கீழ் தில்லியில் வளர்ச்சியின் புதிய சகாப்தம் தொடங்கும் என்றும், சாலைகள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான கட்சியின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவர் உறுதியளித்தார்.

தில்லியில் அடுத்தாண்டு தொடக்கத்தில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகளும் தீவிர களத்தில் இறங்கியுள்ளனர்.

முன்னதாக கடந்த வாரம் தில்லி முதல்வர் அதிஷி, ஆம் ஆத்மி தலைவர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் சாலைகளை மதிப்பீடு செய்தனர். தீபாவளிக்குள்

தேசிய தலைநகரின் சாலைகளில் பழுதுபார்க்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்று மக்களுக்கு உறுதியளித்தனர். இந்த நிலையில் பொதுப்பணித் துறை பழுதுபார்க்கும் பணியை மேற்கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.