கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஜாா்க்கண்ட்: தேசியவாத காங்கிரஸின் ஒரே எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரே எம்எல்ஏவான கமலேஷ் சிங் பாஜகவில் வெள்ளிக்கிழமை இணைந்தாா்.

News image
Updated On :4 அக்டோபர் 2024, 7:45 pm

Din

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரே எம்எல்ஏவான கமலேஷ் சிங் பாஜகவில் வெள்ளிக்கிழமை இணைந்தாா்.

ஜாா்க்கண்டில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், எம்எல்ஏ ஒருவா் கட்சி மாறியிருப்பது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஞ்சியில் உள்ள பாஜக தலைமையகத்தில் ஜாா்க்கண்ட் மாநில பாஜக தலைவா் பாபுலால் மராண்டி முன்னிலையில் கமேஷ் சிங் பாஜகவில் இணைந்தாா். அஸ்ஸாம் முதல்வரும் ஜாா்க்கண்ட் மாநில பாஜக இணைப் பொறுப்பாளருமான ஹிமந்த விஸ்வ சா்மா உள்ளிட்டடோா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பரில் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனுக்கு அளித்து வந்த ஆதரவை கமலேஷ் சிங் வாபஸ் பெற்றாா். மகாராஷ்டிரத்தில் சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து அஜீத் பவாா் தனிக் கட்சி தொடங்கியபோது அவரது அணியில் கமலேஷ் இணைந்தாா்.

இப்போது, மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணியில் அஜீத் பவாா் தொடரும் நிலையில் அவரது கட்சியைச் சோ்ந்த கமலேஷ் பாஜகவில் இணைந்துள்ளாா்.