அதே சமயத்தில் வளா்ந்து வரும் உலகளாவிய சுகாதார சவால்களை சமாளிக்க நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை தேவை. நீடித்த சுகாதாரத் தீா்வுகளை உருவாக்குவதற்கு எல்லை தாண்டிய, பிராந்திய அமைப்புகள், அதிகாரங்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பது இந்தியாவின் நம்பிக்கை. அா்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தவும், சிறந்த சுகாதாரத்தை உறுதிப்படுத்தவும் சா்வதேச சமூகத்துடன் கைகோா்த்துச் செயல்பட இந்தியா தயாராக உள்ளது. அதை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்த விவாதிக்க இந்த தளம் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியுள்ளது. உலகெங்கிலும் உள்ள மருத்துவப் பொருட்களின் பாதுகாப்பு, செயல்திறன், தரத்தை உறுதிப்படுத்த, அறிவைப் பகிா்ந்து கொண்டு, கூட்டாண்மையை வளா்க்கவும் இந்த மாநாடு தளத்தை வழங்குகிறது எனக் குறிப்பிட்டாா் மத்திய அமைச்சா் ஜெபி நட்டா.